Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஜன 27, 2015 12:19 PM


Google News
Latest Tamil News
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை

இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய

கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.

பொருள்: குடந்தையில் (கும்பகோணம்) சயன கோலத்தில் இருப்பவரே! பன்றி உருவில் வந்து பூமிதேவியை காத்தவரே! எங்கள் தலைவரே! கடல் கடந்து இலங்கை சென்று பகைவர் கோட்டைகளை அழித்தவரே! உலகத்தை இரண்டு அடிகளால் அளந்தவரே! உன் திருப்பெயரான நாராயணா என்று சொல்லி வணங்குகிறேன்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us