ADDED : ஜன 03, 2020 12:59 PM

பச்சை மாமலை மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
பொருள்: பச்சைமலை போன்ற அழகிய மேனி கொண்டவரே! செந்தாமரைக் கண்களை உடையவரே! உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! ஆயர் குலத்தின் கொழுந்தே! ஸ்ரீரங்கப்பெருமானே! இந்திர லோகத்தையே ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதை விட்டு விட்டு, உன்னை தரிசிப்பதையே விரும்புகிறேன்.
அச்சுதா அமரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
பொருள்: பச்சைமலை போன்ற அழகிய மேனி கொண்டவரே! செந்தாமரைக் கண்களை உடையவரே! உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! ஆயர் குலத்தின் கொழுந்தே! ஸ்ரீரங்கப்பெருமானே! இந்திர லோகத்தையே ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதை விட்டு விட்டு, உன்னை தரிசிப்பதையே விரும்புகிறேன்.