ADDED : டிச 19, 2024 02:55 PM

மு.பூர்ணிமா, வீரபாண்டி, தேனி: சொந்த வீடு அமைய...
செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன். அவருக்கு செவ்வாயன்று காலை 7:00 மணிக்குள் அர்ச்சனை செய்யுங்கள்.
யூ.யாழினி, மயிலாப்பூர், சென்னை: பாவத்தில் இருந்து விடுபட என்ன வழி?
ஒருவரை ஏமாற்றி இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்பதோடு, உதவியும் செய்யுங்கள்.
யா.தேவகி, தேவனஹள்ளி, பெங்களூரு: நலமாக வாழ யாரை வழிபடலாம்?
நமசிவாய என சொல்லியபடி திருநீறு பூசுங்கள். பிறகு 'மந்திரமாவது நீறு' பதிகத்தை பாடுங்கள்.
பா.சரவணன், குறிஞ்சிப்பாடி, கடலுார்: சுமங்கலியாக வாழ...
கும்பகோணம் திருமங்கலக்குடி மங்களாம்பிகையை தரிசியுங்கள்.
அ.சியாமளா, வால்பாறை, கோயம்புத்துார்: கருடனை தரிசித்தால் எதிரி தொல்லை தீருமா?
முதலையிடம் சிக்கிய யானையைக் காக்க கருட வாகனத்தில் வந்தார் பெருமாள். அவர் உங்களையும் காப்பாற்றுவார்.
து.விமலாவினோத், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: பிறவி ஏற்படாமல் தடுக்க வழி உண்டா...
ஆசைகளை படிப்படியாக குறைத்து மனம் விடுபட்டால் மறுபிறவி தடுக்கப்படும்.
ரா.நீலகண்டன், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி: பிருகு முனிவர் யார்?
பிரம்மாவின் மானச புத்திரர் இவர். தட்சனின் மகளான கியாதியை மணந்து மகாலட்சுமியை மகளாகப் பெற்றார். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ஆசிரியரான இவருக்கு சுக்கிரன் என்ற மகனும் உண்டு.
மு.இளமாறன், இளையான்குடி, சிவகங்கை: விருப்பம் நிறைவேற மகான்களை எப்போது வழிபடலாம்?
வியாழன், பவுர்ணமியன்று விரதம் இருந்து வழிபடுங்கள்.
ரா.தனுஷ், கீர்த்திநகர், டில்லி: காயத்ரி மந்திரத்தை இரவில் ஜபிக்கலாமா...
சூரியன் மறைந்த பிறகு காயத்ரி மந்திரம் ஜபிக்கக் கூடாது. மற்ற மந்திரங்களை இரவில் ஜபிக்கலாம்.
செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன். அவருக்கு செவ்வாயன்று காலை 7:00 மணிக்குள் அர்ச்சனை செய்யுங்கள்.
யூ.யாழினி, மயிலாப்பூர், சென்னை: பாவத்தில் இருந்து விடுபட என்ன வழி?
ஒருவரை ஏமாற்றி இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்பதோடு, உதவியும் செய்யுங்கள்.
யா.தேவகி, தேவனஹள்ளி, பெங்களூரு: நலமாக வாழ யாரை வழிபடலாம்?
நமசிவாய என சொல்லியபடி திருநீறு பூசுங்கள். பிறகு 'மந்திரமாவது நீறு' பதிகத்தை பாடுங்கள்.
பா.சரவணன், குறிஞ்சிப்பாடி, கடலுார்: சுமங்கலியாக வாழ...
கும்பகோணம் திருமங்கலக்குடி மங்களாம்பிகையை தரிசியுங்கள்.
அ.சியாமளா, வால்பாறை, கோயம்புத்துார்: கருடனை தரிசித்தால் எதிரி தொல்லை தீருமா?
முதலையிடம் சிக்கிய யானையைக் காக்க கருட வாகனத்தில் வந்தார் பெருமாள். அவர் உங்களையும் காப்பாற்றுவார்.
து.விமலாவினோத், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: பிறவி ஏற்படாமல் தடுக்க வழி உண்டா...
ஆசைகளை படிப்படியாக குறைத்து மனம் விடுபட்டால் மறுபிறவி தடுக்கப்படும்.
ரா.நீலகண்டன், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி: பிருகு முனிவர் யார்?
பிரம்மாவின் மானச புத்திரர் இவர். தட்சனின் மகளான கியாதியை மணந்து மகாலட்சுமியை மகளாகப் பெற்றார். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ஆசிரியரான இவருக்கு சுக்கிரன் என்ற மகனும் உண்டு.
மு.இளமாறன், இளையான்குடி, சிவகங்கை: விருப்பம் நிறைவேற மகான்களை எப்போது வழிபடலாம்?
வியாழன், பவுர்ணமியன்று விரதம் இருந்து வழிபடுங்கள்.
ரா.தனுஷ், கீர்த்திநகர், டில்லி: காயத்ரி மந்திரத்தை இரவில் ஜபிக்கலாமா...
சூரியன் மறைந்த பிறகு காயத்ரி மந்திரம் ஜபிக்கக் கூடாது. மற்ற மந்திரங்களை இரவில் ஜபிக்கலாம்.