Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : அக் 24, 2024 02:59 PM


Google News
Latest Tamil News
சு.விமலா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி.

*தீபாவளி என்றால்...

ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றுவது தீபாவளி.

சி.சுதாமதி, மணலிபட்டு, புதுச்சேரி.

*முன்னோரை தீபாவளியன்று வழிபடலாமா?

தீபாவளியன்று அமாவாசை வந்தால், தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட வேண்டும்.

எம்.வனிதா, அடகூர், மைசூரு.

*பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்படி வந்தது?

உல்காமுகம்' என்னும் தீப்பந்தத்தை வெடிக்கும் பழக்கம் புராண காலத்தில் இருந்தது. தற்போது அது பட்டாசாக மாறி விட்டது.

ரா.கங்கா, பப்பன்கிளேவ், டில்லி.

*தீபாவளிக்கும், திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு இல்லை. ஆனால் இரண்டு நாளிலும் தீபம் ஏற்றுகிறோம்.

வெ.புனிதா, புளியரை, தென்காசி.

*ராமாயணத்திற்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

சீதையை மீட்டு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளி. அன்று தீபமேற்றி மக்கள் அவர்களை வரவேற்றனர்.

வி.நடராஜன், தேவகோட்டை, சிவகங்கை.

*தீபாவளி, சுதந்திர தினம் - என்ன ஒற்றுமை...

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் சுதந்திர தினம். நரகாசுரனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் தீபாவளி.

என்.மணி, தொட்டிக்கலை, திருவள்ளூர்.

*தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

நரகத்தில் உள்ள முன்னோர் விடுபட தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.

கே.வினோத், கொடைக்கானல், திண்டுக்கல்

*தீபாவளிக்கு புத்தாடை அணிவது ஏன்?

நரகாசுரன் தன் இறப்பை புத்தாடையுடன் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் பெற்றதால்...

டி.லட்சுமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.

*தீபாவளியன்று சுமங்கலிகள் விரதமிருப்பது ஏன்?

தம்பதி ஒற்றுமைக்காக கேதாரகவுரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us