Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஆக 13, 2024 08:46 AM


Google News
Latest Tamil News
கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி.

*மகாபுருஷர் யார்?

போரின் போது ஆயுதத்தை இழந்தார் ராவணன். எதிரியான அவரிடம் இரக்கப்பட்டு 'இன்று போய் நாளை வா' என சொன்னார் மகாபுருஷரான ஸ்ரீராமர்.

வி.ரஜினி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*பக்தனின் குணம் என்ன?

துாய்மையான மனம், ஒழுக்கம்.

பி.பத்மா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*தனியாக அல்லது தம்பதியாக விரதமிருத்தல் - எதற்கு பலன் அதிகம்?

பலன் ஒன்றே. தம்பதியாக விரதமிருப்பது விசேஷம்.

எம்.சுவேதா, குற்றாலம், தென்காசி.

*பிறந்த நட்சத்திரம் இரண்டு நாள் இருந்தால் எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

சூரிய உதயத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் உங்கள் நட்சத்திரம் இருந்தால் அந்த நாளே பிறந்தநாள்.

ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.

*மரணத்தை கண்டு பயப்படாதவர் யார்?

துறவிகள். ஏனெனில் பிறவியை விட்டு விலகி கடவுளை உணர்ந்தவர்கள் அவர்கள்.

தி.லோகநாதன், தோப்பூர், மதுரை

*எந்த மூலையில் போர்வெல் தோண்டலாம்?

வடகிழக்கு (ஈசான்யம்) மூலையில் தோண்டுவது நல்லது. முடியாத போது வடமேற்கு (வாயு) மூலையில் தோண்டலாம்.

பா.மணிவண்ணன், எழும்பூர், சென்னை.

*ராகு, எமகண்டத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே...

ராகு, கேது அசுர கிரகங்கள் என்பதால் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

அ.மாயூரா, ஹலசூரு, பெங்களூரு.

*இந்திரியம் என்றால் என்ன?

கண், காது, மூக்கு, வாய், மெய்(உடம்பு) ஆகியவை இந்திரியம்.

வி.ரம்யா, ஆண்டிப்பட்டி, தேனி.

*அரச மரத்தை வழிபடுவது ஏன்?

மகாவிஷ்ணுவின் அம்சம் அரசமரம். இதைச் சுற்றுவதும், இங்கு தியானம் இருப்பதும் நல்லது. இதனால் மனபலம் அதிகரிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us