Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நற்குணங்களை வளர்ப்போம்!

நற்குணங்களை வளர்ப்போம்!

நற்குணங்களை வளர்ப்போம்!

நற்குணங்களை வளர்ப்போம்!

ADDED : செப் 29, 2015 11:09 AM


Google News
இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்த போதனைகள் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.

* எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் (சொர்க்கம்) அவர்களுடையது.

* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.

* சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

* நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்.

* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.

* நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

இயேசு நமக்கு போதித்த இரக்கம், நீதி. சமாதானம், எளிமை, சாந்தம் ஆகிய வார்த்தைகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலே, இவ்வுலகில் சண்டை ஏது? போட்டி பொறாமை ஏது? நற்குணங்களை வளர்க்க நாமும் உறுதியெடுப்போம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us