Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/உருக்கத்துடன் ஜெயிப்போமா!

உருக்கத்துடன் ஜெயிப்போமா!

உருக்கத்துடன் ஜெயிப்போமா!

உருக்கத்துடன் ஜெயிப்போமா!

ADDED : பிப் 25, 2013 05:44 PM


Google News
Latest Tamil News
ஆண்டவரிடம் தினமும் உருக்கமான ஜெபம் செய்யுங்கள். இதோ! அந்த பிரார்த்தனை.

* ஆண்டவரே! என் ஜீவனை உமக்கே அர்ப்பணிக்கிறேன்.

* என் நேரங்களை, என் நாட்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் ஓய்வின்றி உம்மையே புகழ்ந்து கொண்டிருக்கட்டும்.

* என் கரங்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். என் கரங்களின் கிரியைகள் உமது அன்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கட்டும்.

* என் கால்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் உமது பார்வையில் அழகாக இருக்கட்டும்.

* என் குரலை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் என் ராஜாவை (ஆண்டவரை) புகழ்ந்து பாடிக்கொண்டேயிருக்கட்டும்.

* என் உதடுகளை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகளால் உம்முடைய செய்திகளால் நிறைந்திருக்கட்டும்.

* இரக்கமுள்ள ஆண்டவரே! என்னிடமிருக்கும் பொன்னும் வெள்ளியும் உம்முடையதே. அவற்றை உமக்கே ஒப்புவிக்கிறேன். நீர் விரும்புகிறபடியே அவைகள் செலவழிக்கப்படட்டும்.

* என் புத்திக்கூர்மையை உமக்கே ஒப்புவிக்கிறேன். நீர் தெரிந்தெடுக்கிற வண்ணமாக அதைப் பயன்படுத்தும்.

* என் சித்தத்தை உமக்கே ஒப்புவிக்கிறேன். அதை உம்முடைய சித்தத்தின்படியே உருவாக்கும்.

* என் இருதயத்தை உமக்கே ஒப்புவிக்கிறேன். அது இனி உம்முடையது.

* ஆண்டவரே! என் அன்பை உமது பாதத்தில் ஊற்றி விடுகின்றேன். அதை நீர் ஏற்றுக்கொள்ளும்.

* என்னையே உம்மிடம் ஒப்புவிக்கிறேன். என்னை என்றும் உம்முடையவன் ஆக்கிக்கொள்ளும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us