Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

ADDED : அக் 21, 2014 12:32 PM


Google News
Latest Tamil News
* கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. 'கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்டு பார்ப்போமே!

* மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

* சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் <உங்களை விட்டுவிடுவார்

* நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.

* மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார்.

* எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்கு சொல்லியிருந்தோம்.

புரிந்து கொண்டீர்களா! ஆண்டவரின் அன்பைப் பெற நினைத்தால், அவரை அன்றாடம் ஜெபியுங்கள். அவரது ஆசிக்கரம் உங்களை நோக்கி நீளும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us