Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/விட்டுக் கொடுப்போம்

விட்டுக் கொடுப்போம்

விட்டுக் கொடுப்போம்

விட்டுக் கொடுப்போம்

ADDED : டிச 17, 2020 05:38 PM


Google News
Latest Tamil News
பண்ணையார் ஒருவர் வியாபாரிக்கு கடன் கொடுத்து உதவினார். ஆனால் நீண்ட நாளாகியும் கடனைச் செலுத்தவில்லை. ஒருநாள் வியாபாரியை வரவழைத்து, பணம் தராவிட்டால் தண்டிக்கப் போவதாக தெரிவித்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சொல்லி தள்ளுபடி செய்ய வேண்டினார் வியாபாரி. இரக்கப்பட்ட பண்ணையாரும் விட்டுக் கொடுத்தார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற வியாபாரி தன்னிடம் சொற்ப தொகை கடன் வாங்கிய வேலைக்காரனைக் கூப்பிட்டார். ''இப்போதே கடனாக கொடுத்த பணம் வர வேண்டும்'' என நிர்ப்பந்தம் செய்தார். வேலைக்காரன் வழியின்றி தவித்தான். இந்த விஷயம் பண்ணையாரின் கவனத்திற்கு சென்றது. வியாபாரியை கூப்பிட்டு, 'என்னைப் போல நீயும் இரக்கம் காட்ட வேண்டாமா?' என்றதோடு வியாபாரியிடம் பணத்தை வசூலிக்கும் முடிவுக்கு வந்தார்.

பிறரை நேசித்தும், விட்டுக் கொடுத்தும் வாழ்பவனே நல்ல மனிதன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us