
விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி கொண்ட மரத்தின் கீழ் சோம்பேறி ஒருவர் உட்கார்ந்திருந்தார். இங்கேயே தண்ணீரும், உணவும் கிடைத்தால் நல்லதே என அவர் நினைத்த உடனேயே, அங்கே தண்ணீரும், அந்த மரத்திலிருந்து பழமும் கிடைத்தது. சாப்பிட்டதன் காரணமாக துாக்கம் வரவே, கட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். உடனே கட்டிலும் வந்தது. துாக்கத்தில் திடீரென்று விழித்தார்.
'நினைச்சது எல்லாம் நடக்குதே, ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அது என்னை கொன்று விட்டால் என்ன செய்வது' என பயந்தான். அதுவும் உண்மையானது. பிசாசு அவனை கொன்றது. சோம்பேறித்தனத்தால் வந்த விளைவு இது. இதற்கு தீர்வு... கடமையை ஒழுங்காக செய்.
'நினைச்சது எல்லாம் நடக்குதே, ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அது என்னை கொன்று விட்டால் என்ன செய்வது' என பயந்தான். அதுவும் உண்மையானது. பிசாசு அவனை கொன்றது. சோம்பேறித்தனத்தால் வந்த விளைவு இது. இதற்கு தீர்வு... கடமையை ஒழுங்காக செய்.