Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/பிரார்த்தனை பலித்தது

பிரார்த்தனை பலித்தது

பிரார்த்தனை பலித்தது

பிரார்த்தனை பலித்தது

ADDED : மார் 28, 2025 07:51 AM


Google News
அந்த ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் குடியேறினார் பாதிரியார் மைக்கேல். அருகில் உள்ள சேரிப்பகுதியில் சிறுவயதில் இருந்தே போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தினார்.

இதனால் அவர்களின் வாழ்வு பிரகாசமானது. இதை விரும்பாத போதை பொருள் விற்கும் சிலர், ரவுடிகள் மூலம் மிரட்டினர். ஆனாலும் அவரின் சேவை தொடர்ந்தது. கோபம் அடைந்த ரவுடிகள் ஒருநாள் பாதிரியாரின் வீட்டை தாக்க முயற்சித்தனர். இதை அறிந்த அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி வீட்டு, வேறு வழியில் தப்பிக்க முயற்சித்தார்.

சிரமமான சூழ்நிலையிலும் அவரது குழந்தைகள் ஆண்டவரை நோக்கி இடைவிடாமல் ஜெபம் செய்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த வேட்டை நாய்கள் இரண்டு ரவுடிகளை கடித்து குதறியது. பார்த்தீர்களா! உண்மையான பிரார்த்தனை பலித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us